தமிழ்நாட்டில் ஜீன்7ம் திகதிக்கு பின் ஊடரங்கு தொடருமா.?
தமிழ்நாட்டில் எதிர்வரும் 7ஆம் திகதியுடன் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு முடிவுக்கு வருகின்றது

சென்னை,
கடந்த மே மாதம் 10ம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் கொரோணா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரமையினால் கடந்த மே 24ம் திகதி முதல் 31ம் திகதி வரை முழு ஊரடங்கை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதித்திருந்தார்.
தொற்று பரவல் கட்டுக்குள் வராததையடுத்து, மீண்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு ஒருவாரம் நீட்டிக்கப்பட்டது. அதாவது ஜூன் 7 ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிய இன்னும் சில தினங்களே உள்ளதால், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவெடுக்க முதல் - அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இந்நிலையில். சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர், சுகாதாரச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு மற்றும் அரசு மேற்கொண்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலின் வேகம் குறைந்து படிப்படியாக குறையத்தொடங்கியுள்ளது. இதனால், ஊரடங்கு தளர்வுகள் இன்றி நீட்டிக்கப்படுமா? அல்லது சில தளர்வுகள் அளிக்கப்படுமா? என்பது குறித்து மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.